அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியில் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து கோவை வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, கலைக்கல்லூரி சாலையில் உள்ள கோவை நீதிமன்றத்தின் கிழக்கு நுழைவாயிலில் கோவை மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்றிணைந்து அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தண்டபாணி கூறுகையில், தமிழகம் எங்கும் வழக்கறிஞர்களாக தொழில் செய்து வருகின்ற வழக்கறிஞர்கள் தங்களுடைய நியமான கோரிக்கைகள் எடுத்து சொல்லி போராடிய நேரங்களில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, இன்று அகில இந்திய பார் கவுன்சில் முயற்சியால் ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக, 25 வழக்கறிஞர்கள் மீது வாழ்நாள் முழுதும் அவர்கள் தொழில் செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 

இதையெல்லாம் கண்டிக்கின்ற வகையிலும், அவர்கள் உரிமைகள் பாதுகாக்கின்ற வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டு நடவடிக்கை அறிவிற்புக்கேற்ப கோவையில் இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேபோல், பல்வேறு இடங்களிலும் போராட்டம் நடைபெறுகிறது. இதன் மூலம் இவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...