தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகப்படுத்தினார் நடிகர் விஜய்

சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி ஏற்றிவைத்தார். கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.


சென்னை: நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) கட்சியின் கொடி இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.



சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சித் தலைவர் விஜய் கொடியை ஏற்றிவைத்து, கட்சியின் பாடலையும் வெளியிட்டார்.





இந்த நிகழ்வில் உரையாற்றிய விஜய், "இன்று நம் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. அதுதான் நம் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான நாள், நேரத்தை அறிவிப்பேன்," என்றார்.

மேலும் அவர், "இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை பலப்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம். புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதையும், நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை மாநாட்டில் சொல்வோம்," என்று குறிப்பிட்டார்.



த.வெ.க கொடியில் சிவப்பு, மஞ்சள் நிறங்கள், இரட்டை யானைகள், மையத்தில் வட்ட வடிவத்துக்குள் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றுள்ளன. கொடி குறித்தான விளக்கத்தை வரவிருக்கும் மாநாட்டில் தெரிவிப்பதாக விஜய் கூறினார்.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...