அவினாசி அத்திகடவு திட்டம்: பாஜக பெருமை கொள்வது நியாயமற்றது - கொமதேக தலைவர் ஈஸ்வரன் விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கொமதேக தலைவர் ஈஸ்வரன், அவினாசி அத்திகடவு திட்டத்தில் பாஜகவின் பங்களிப்பு இல்லை என்றும், மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை என்றும் விமர்சித்தார்.



Coimbatore: கோவை சின்னியம்பாளையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் (கொமதேக) தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் அவர் அவினாசி அத்திகடவு திட்டம் குறித்து பேசினார்.

அவினாசி அத்திகடவு திட்டம் 60 ஆண்டு கால போராட்டத்தின் விளைவு என்றும், 2009-ல் அப்போதைய முதல்வர் கருணாநிதி இத்திட்டத்திற்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டதாகவும் ஈஸ்வரன் கூறினார். அதன் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள் இத்திட்டத்தை கவனிக்கவில்லை என்றும், கொமதேக தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் விளைவாக 2016-ல் அதிமுக அரசு ஆய்வுக்கு 3 கோடி ஒதுக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.



"அவினாசி அத்திகடவு திட்டத்தின் 67 சதவீத பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவு பெற்றிருந்தது. எடப்பாடியார் இந்த திட்டத்தை துவங்கியதற்கு அனைத்து தரப்பு சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்," என்று ஈஸ்வரன் கூறினார். தற்போதைய திமுக அரசு இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டினார்.

பாஜக தலைவர்களின் கூற்றுகளை விமர்சித்த ஈஸ்வரன், "ஒன்றிய அரசு இத்திட்டத்திற்கு ஒரு பைசா கூட நிதி தரவில்லை. ஆனால் பாஜக தலைவர்கள் தாங்கள்தான் இத்திட்டத்தைக் கொண்டு வந்ததுபோல் பேசுகின்றனர். பெருமையில் மட்டும் பங்கு கேட்கின்றனர்," என்றார்.

மேலும், கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றிற்கு பாஜக எந்த முன்னேற்றமும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டிய ஈஸ்வரன், "பாஜகவின் தேர்தல் அறிக்கைக்கு 4.5 லட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்ற உங்கள் பிரதமரிடம் பேசி திட்டங்களை வாங்கிக் கொடுங்கள்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...