கோவையில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் 'அரசியல் அறிவு' அமைப்பின் முதல் பயிலரங்கு நடைபெற்றது

கோவையில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் "அரசியல் அறிவு" அமைப்பின் முதல் பயிலரங்கு நடைபெற்றது. "உள்ளாட்சி அரசு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிலரங்கில் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் கலந்து கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மசக்காளிபாளையம் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் "அரசியல் அறிவு" என்ற அரசியல் பயிற்றுவிப்பு அமைப்பின் முதல் பயிலரங்கு இன்று நடைபெற்றது.



"உள்ளாட்சி அரசு" என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முன்னோட்ட பயிலரங்கில் 'கனவு தமிழ்நாடு' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி கட்டமைப்பின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிலரங்கின் இறுதியில் கேள்வி-பதில் நிகழ்வும் நடைபெற்றது.



இந்த நிகழ்வில் பேசிய சுரேஷ் சம்பந்தம், "தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்க, பல துணைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டி உள்ளது. அதில் ஒரு கட்டமைப்பு என்னவென்றால், அரசியல் தெளிவு மிக்க இளைஞர்களை அரசியல் நோக்கி கொண்டு செல்வது. அத்தகைய இளைஞர்கள் சட்டசபையிலும் நாடாளுமன்றத்திலும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையும் தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சட்டம் இயற்றுவார்கள் என்ற குறிக்கோளோடு இளைஞர்கள் மத்தியில் அரசியல் அறிவைக் கொண்டு சேர்ப்பதே இந்த 'அரசியல் அறிவு' அமைப்பு" என்று கூறினார்.

மேலும் அவர், "இது ஒரு அரசியல் பயிற்றுவிப்பு அமைப்பு. ஒரு சேப்டருக்கு 50 பேர் வீதம் தொகுதிக்கு பத்து சேப்டர்களை உருவாக்க உள்ளோம். இவ்வாறு தொகுதி வாரியாக அரசியல் தெளிவு மிக்க 500 இளைஞர்களை உருவாக்கும்போது அவர்கள் மற்றவர்களிடம் இதைக் கொண்டு சேர்ப்பார்கள்" என்றும் தெரிவித்தார்.

இந்த முன்னோட்ட பயிலரங்கில் 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அரசியல் அறிவு அமைப்பின் அடுத்த பயிலரங்கு 'சட்டமன்றம்' என்ற தலைப்பில் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி சிங்காநல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...