கோவையில் தோல் தான விழிப்புணர்வு குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு

கோவையில் தோல் தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 'தேன்மொழி' என்ற குறும்படத்திற்கான பூஜை நிகழ்வு நடைபெற்றது. அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், ரோட்டரி 3201, கங்கா மருத்துவமனை மற்றும் வோல்ட் மலையாளி கவுன்சில் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.


கோவை: கோவை பந்தைய சாலையில் உள்ள ரோட்டரி 3201 அலுவலகத்தில் தோல் தான விழிப்புணர்வு குறித்த 'தேன்மொழி' குறும்பட பூஜை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை மூத்த வழக்கறிஞர் சுந்தர வடிவேல் துவக்கி வைத்தார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.கே.குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன், மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் செந்தில் குமார், வோல்ட் மலையாளி கவுன்சில் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குறும்படத்தின் இயக்குனர் குமார் தங்கவேல், நடிகை சிவசக்தி, குழந்தை நட்சத்திரம் பேபி ரக்சிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

'தேன்மொழி' குறும்படம், தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையின் கதையைச் சித்தரிக்கிறது. தனது அழகை இழந்த குழந்தைக்கு, கங்கா மருத்துவமனையின் தோல் தான மையம் எவ்வாறு உதவி புரிகிறது என்பதை இக்குறும்படம் விளக்குகிறது. மேலும், தோல் தானத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கிறது.

ரோட்டரி 3201 ஆளுநர் சுந்தரவடிவேல் கூறுகையில், "இக்குறும்படத்தின் மூலம் கங்கா தோல் தான மையத்தை எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், ரோட்டரி 3201, அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம், வோல்டு மலையாளி கவுன்சில் ஆகியவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் தெளிவாக எடுத்துரைக்க உள்ளோம்," என்றார்.

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் பொதுச் செயலாளர் வி.எச்.சுப்பிரமணியம், "தோல் தான விழிப்புணர்வு குறித்து பொதுமக்களிடம் போதிய அறிவு இல்லை. இக்குறும்படத்தின் மூலம் தோல் தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க உள்ளோம்," என்று தெரிவித்தார்.

மாநில மகளிரணி தலைவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் லதா அர்ஜூனன் கூறுகையில், "தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு உண்டு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த 'தேன்மொழி' குறும்படம் எடுக்கப்பட உள்ளது," என்றார்.

இக்குறும்படம் மூலம் தோல் தான விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்தி, கங்கா மருத்துவமனை நடத்தி வரும் தோல் சேமிப்பு மையத்திற்கு உதவ முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...