உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 72-வது பிறந்தநாள் விழா கேக் வெட்டி, அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.



Coimbatore: உடுமலையில் தேமுதிக நிறுவனர் பத்மபூஷன் விஜயகாந்த் அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடுமலை மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் டி.ஆறுச்சாமி கேக் வெட்டி விழாவைத் தொடங்கி வைத்தார்.

விழாவில் மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் பன்னீர்செல்வம், பொருளாளர் அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர் கிரி, பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடுமலை நகரம், உடுமலை ஒன்றியம் மற்றும் குடிமங்கலம் பகுதிகளில் கட்சியின் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.



கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, உடுமலை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. மேலும், உடுமலையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா கருணாகரன் மதிய உணவு வழங்கினார். குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள், துணைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட ஒன்றியப் பொறுப்பாளர்களும் அன்னதானம் வழங்கினர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை உடுமலை நகர செயலாளர் ராமச்சந்திரன், நகரப் பொருளாளர் தென்றல் யூசுப், உடுமலை ஒன்றியப் பொறுப்பாளர் சுரேஷ், குடிமங்கலம் ஒன்றியப் பொறுப்பாளர் பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்வில் மாவட்ட மகளிர் அணி ஷர்மிளா, எரிசனம்பட்டி மாரிமுத்து, ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்வின் நிறைவில் நகர அவைத் தலைவர் ராஜேந்திரன் மற்றும் ரவி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...