கோவையில் அரசு விடுமுறை அன்று இயங்கிய பள்ளி - மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவால் மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்

கோவையில் கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் இயங்கிய CBSE பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அறிவித்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.



Coimbatore: கோவையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொது விடுமுறையை மீறி இயங்கிய ஒரு பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அளித்தது.

புளியகுளம் பகுதியில் உள்ள வித்யா நிகேதன் என்ற CBSE பாடத்திட்டப் பள்ளி இன்று காலை முதல் இயங்கியது. LKG மற்றும் UKG மாணவர்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளி சீருடையில் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.



இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மதியம் 12 மணிக்கு விடுமுறை அறிவித்தது. பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டது.

மதியம் எதிர்பாராத விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அரசு விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது குறித்து பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

பள்ளி நிர்வாகம் கூறுகையில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காகவே பள்ளி திறந்திருந்ததாகவும், மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவைப் பெற்றவுடன் உடனடியாக விடுமுறை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...