ஆனைகட்டி அருகே மண் சகதியில் சிக்கி பெண் காட்டு யானை பலி


கோவை மாவட்டம், ஆனைகட்டி அருகே அமைந்துள்ளது செம்பிக்கரை கிராமம். அடர்ந்த வனப்பகுதியின் அருகே அமைந்துள்ள இக்கிராமத்தில் நீர் மற்றும் உணவுக்காக காட்டு யானைகள் அவ்வப்போது வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று சுமார் 10 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று தண்ணீர் குடிப்பதற்காக செம்பிக்கரையில் உள்ள நீர் குட்டைக்கு வந்துள்ளது. அப்போது குட்டையில் இருந்த நீர் வறண்டு மண் சகதியாக இருந்த நிலையில் யானை அதில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.



இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஜேசிபி வாகன உதவியுடன் யானையின் உடலை மீட்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனைகட்டி பகுதியிலேயே தண்ணீர் தேடி வந்த யானை உயிரிழந்தது. தொடர்ந்து, கோவை மாவட்டத்திலும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் உள்ள வனப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் உயிரிழந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...