கோவையில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து இன்று அய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ஹரஹரன் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரம் ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்ளையும் தர ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்யும் வகையில் இன்று கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.



இப்பணிகளை மேற்கொள்ள மாநகர காவல்துறை, போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஆகிய துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, இருக்கை வசதிகள், அவசரக்கால வழி, வேகக்கட்டுப்பாட்டு கருவி, ஓட்டுநர் கண்பார்வை மற்றும் உடல்தகுதி, உதவியாளர் நிலை உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும்.



கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று (ஏப்ரல் 27) 441 பள்ளி வாகனங்களும், நாளை (ஏப்ரல் 28) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது" என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...