அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த கோவை தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம்

கோவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசனை சந்தித்த கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கம், பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை வழங்கினர். அமைச்சர் துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


கோவை: கோவைக்கு வருகை தந்த தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசனை இன்று (29.08.2024) கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்கநகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (CAGJMA) தலைவர் ரகுநாதன் சுப்பையா (SR) மற்றும் செயலாளர் தண்டபாணி ஆகியோர் சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, சங்கத்தினர் பொற்கொல்லர்களின் நலன் காக்கும் கோரிக்கைகளை அமைச்சரிடம் வழங்கினர். சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில், அமைச்சர் அன்பரசன் ஆர்வமுடன் பொற்கொல்லர்களின் பிரச்சினைகளையும், தங்க நகை தயாரிப்பு பற்றியும் கேட்டறிந்தார்.

பொற்கொல்லர்களின் கோரிக்கைகள் மீது துரித நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தினர் தெரிவித்தனர். அமைச்சரின் இந்த உறுதிமொழிக்கு CAGJMA சங்கத்தின் சார்பாக தலைவர் மற்றும் செயலாளர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...