கோவையில் வேளாண் இயந்திரங்கள் குறித்த முகாம்: இ-வாடகை செயலி மூலம் உபகரணங்களை பெறலாம் - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்த முகாம் நடைபெற்றது. இ-வாடகை செயலி மூலம் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் இயக்குதல், பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati அவருடன் முகாமைப் பார்வையிட்டார்.

இந்த முகாமில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் Kranthi Kumar Pati, "விவசாயத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு உபகரணங்கள் குறித்தும் அதற்கான திட்டங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உபகரணங்களை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் அதற்கான பராமரிப்பு குறித்தும் இங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது" என்றார்.



மேலும் அவர், "இ-வாடகை என்ற செயலி மூலம் விவசாயிகள் உபகரணங்களை வாடகைக்கு பெற்று பயன்பெறலாம். இந்த செயலியை உபயோகிப்பதற்கான பயிற்சியும் இங்கு வழங்கப்படுகிறது. கோயம்புத்தூரில் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க இயந்திரமயமாக்களை அதிகபடுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இந்நிகழ்வு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.



உணவு பாதுகாப்பு மற்றும் பொது இடங்களில் போட்டிகள் நடத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பேசினார். "உணவகங்களில் பாதுகாப்பான உணவு வழங்கப்பட வேண்டும். பொது இடங்களில் போட்டிகள் நடத்த காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். இல்லையென்றால் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...