கோவை கணுவாய் தடுப்பணை புனரமைப்பு: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

கோவை கணுவாய் தடுப்பணையை புனரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இப்பணி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும்.



கோவை: கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் அமைந்துள்ள கணுவாய் தடுப்பணையை புனரமைப்பதற்கான துவக்க விழா நடைபெற்றது. கெளசிகா நீர்கரங்கள் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமை வகித்தார்.



இவ்விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன், கோவை நீர்வளத்துறை பாசன உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் அம்சராஜ் மற்றும் பன்னிமடை ஊராட்சி தலைவர் பி.எஸ்.எம். ரத்தினம் மருதாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆட்சியர் பூமி பூஜை செய்து விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். கணுவாய் தடுப்பணையை புனரமைக்க கெளசிகா நீர்கரங்கள் சார்பாக ஒரு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர்.

இந்த குழுவினர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் கணுவாய் தடுப்பணையை தூர்வாரும் பணியில் ஈடுபடுவர். இதன் மூலம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வரும் மழைநீர் கணுவாய் தடுப்பணை வழியாக சின்ன வேடம்பட்டி ஏரிக்கு மண்ணரிப்பின்றி செல்ல முடியும்.

இந்த முயற்சியால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...