கோவை GV ரெசிடென்சி பகுதியில் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம்

கோவை GV ரெசிடென்சி பகுதியில் உள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டு, அப்பகுதி பசுமைப் பூங்காவாக மாற்றப்படும் திட்டம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.


Coimbatore: கோவை GV ரெசிடென்சி பகுதியில் அமைந்துள்ள ரிசர்வ் சைட்டில் இருந்த கட்டிட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை பசுமைப் பரப்பாக மாற்றி அமைக்கும் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டப்பணிகளை சிங்கை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும், கழக சுற்றுச்சூழல் அணி துணை செயலாளருமான மணிசுந்தர் தலைமையில் ஒரு குழு மேற்கொண்டு வருகிறது. இக்குழுவில் மருத்துவர் அணி அமைப்பாளர் பிரதீப், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜவஹர் வெள்ளிங்கிரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



இந்நிலையில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் நேரில் சென்று இப்பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தரமான முறையில் செயல்படுத்த வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.



இந்த திட்டம் நிறைவடைந்தால், GV ரெசிடென்சி பகுதி மக்களுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமைப் பூங்காவாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது பகுதியின் அழகையும் மேம்படுத்தும் என்பதோடு, மக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவும் என்று நம்பப்படுகிறது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...