மனதை மயக்கும் உதகை பைகாரா நீர்வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்


நீலகிரி மாவட்டம், உதகை பைகாரா அருவி நீர்வீழ்ச்சி சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசிதிபெற்றதாகும். இயற்கை எழில்கொஞ்சும் இதன் அழகை காண தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் திரண்டு வருவர். 

இதனிடையே, தமிழகம் முழுவதும் கடந்த அண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும், சரிவர பருவ மழை பெய்யாததன் காரணமாக பசுமை நிலங்கள் வறண்டு காணப்படுகிறது.



இந்நிலையில், தற்போது வெப்பசலனத்தின் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து மலைப் பகுதிகளில் சற்று குளுமையான சீதோஷனம் நிலவிவருகிறது.

உதகையில் கடந்த சில மாதங்களாக மழையின்றி அங்கமைந்துள்ள பைகாரா நீர்வீழ்ச்சியில் நிர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இதனால் கடந்த இரு மாதமாக பைகாரா நீர்வீழ்ச்சியில் செய்யப்பட்டு வந்த மின்உற்பத்தியும் தடைபட்டிருந்தது. 



இந்நிலையில், தற்போது பைகாரா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சில தினங்களாகப் பெய்த மழையின் காரணமாக, பைகாரா நீர்வீழ்ச்சியில் நீர் திரண்டு ஓடிவருகிறது. வெயில் வாட்டி வரும் வேளையில் இந்த குளுகுளு காட்சியினைக் காண சுற்றுலா பயணிகளின் குவிந்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...