கோவை கொடிசியாவில் 2 நாள் டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம்


ஐவரி கண்காட்சி மற்றும் கைடன்ட் நிறுவனம் சார்பில் இந்தியாவில் முதல் முறையாக டென்டல் லேப் எக்ஸ்போ மற்றும் கருத்தரங்கம் கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் வரும் ஏப்ரல் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

முதல் முறையாக பல் சிகிச்சை துறையில் உலகமெங்கும் உள்ள மருத்துவர்களும், வல்லுநர்களும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்று தங்களின் அனுபவங்களையும், அறிவையும் பகிந்துகொள்ள உள்ளனர். இத்தகைய கருத்தங்கம் மற்றும் கண்காட்சி பல் மருத்துவர்கள் மற்றும் அந்தத் துறை சார்ந்துள்ள தொழில்நுட்ப வல்லநர் தங்களின் அறிவை விஸ்தரித்துக் கொள்ள உதவியாக இருக்கும். மேலும், பல் சிகிச்சை சார்ந்த துறை மேம்பாட்டுக்கும் இந்தக் கருத்தரங்கம் உறுதுணையாகும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்தக் கருத்தரங்கில் பல் சிகிச்சை துறை சார்ந்த 60-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் உரையாற்ற உள்ளனர். மேலும், கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த அரங்குகளில் பல் சிகிச்சையில் புதிதாக வந்துள்ள நவீன தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளும், சிகிச்சை முறைகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இந்தக் கண்காட்சி ஒருங்கிணைப்புக் குழுவில் நாட்டிலேயே தலைசிறந்த மருத்துவர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இடம்பெறவுள்ளனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி துணை முதல்வர் வி.ஆர்.திருமூர்த்தியும், மும்பையில் பிரபல பல் மருத்துவராக உள்ள சந்தோஷ் மயக்கர் ஆகியோர் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சிக்கு தலைமை வகிக்க உள்ளனர்.

டேன்டல் கல்லுரி மதுரா டீனும், கைடன்ட் இதழ் ஆசிரியருமான மருத்துவர் மனீஷ் ரஹோரி கண்காட்சி ஒருங்கிணைப்பு செயலாளராக உள்ளார். ஹைதராபாத் பிரபல மருத்துவராக உள்ள மகேந்திரநாத் ரெட்டி கண்காட்சி அறிவியல் கமிட்டி தலைவராக உள்ளார். பெங்களூர் கான்பிடென்ட் ஆய்வகத்தின் இயக்குநர் கமிட்டியின் துணைத் தலைவராக உள்ளார். கருத்தரங்கின் புரவலர்களாக முன்னாள் ராணுவ வீரர் அன்வரீன் கானி, ஆர்விஎஸ் டென்டல் கல்லூரி முன்னாள் முதல்வர் மருத்துவர் பி.ராஜ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி அறங்காவலர் ஆர்.விஜயகுமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு மாநில பல் சிகிச்சை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், கர்நாடக மாநில பல் சிகிச்சை ஆய்வகங்களின் சங்கம், மகாராஷ்டிரா டென்டல் மெக்கானிக்ஸ் சங்கம், குஜராத் பல் சிகிச்சை ஆய்வகங்களின் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைக்கவுள்ளார். இந்திய டென்டல் கவுன்சில் செயற்குழு உறுப்பினராக உள்ள மருத்துவர் சுரேஷ் குமார் கதரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...