திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் திறப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.



Coimbatore: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கல்குவாரிகள் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டம் ஊத்துக்குளி வட்டம் மொரட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உரிமம் புதுப்பித்து மீண்டும் குவாரிகளை இயக்குவது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் குவாரி இயக்க அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தினர். மறுபுறம், மொரட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இக்குவாரிகளை நம்பி இருப்பதால் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் இரு தரப்பு கருத்துக்களையும் பதிவு செய்து கொண்டனர். மேலும், கருத்துக்கேட்பு தொடர்பான தகவல்களை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த கருத்துக்கேட்பு கூட்டம் குவாரிகள் திறப்பது தொடர்பான முடிவெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...