மதுக்கரையில் இன்ஜினியரிங் நிறுவனத்தில் கொள்ளை: இரண்டு பேர் கைது

மதுக்கரையில் உள்ள இன்ஜினியரிங் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அசீம் மணிகுண்ணன் (35) என்பவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். செப்டம்பர் 2 ஆம் தேதி, நிறுவனத்தின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அசீம் மணிகுண்ணன், சூப்பர்வைசர் மகேந்திரன், மற்றும் மசூத் ஆகியோர் உள்ளே சென்று பார்த்தபோது, வெல்டிங் இயந்திரம், கிரைண்டிங் இயந்திரம் உள்ளிட்ட சுமார் ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து அசீம் மணிகுண்ணன் சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த டிரைவர் நாகூர்தீன் (30) மற்றும் சுந்தராபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் (56) என்பது தெரியவந்தது.

இந்த தகவலின் அடிப்படையில், போலீசார் நாகூர்தீன் மற்றும் ஈஸ்வரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...