பிரான்ஸ் சென்ற கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் - பாரா பேட்மிட்டன் வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் பிரான்ஸ் பாரிஸில் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளுடன் ஈபிள் டவரில் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த தகவலை அவர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பாரா பேட்மிட்டன் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீராங்கனைகளை சந்தித்துள்ளார்.



இது குறித்து வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "நேற்று (செப்டம்பர் 2) பிரான்ஸ் பாரிஸ் நகரில் நடைபெற்ற பாரா பேட்மிட்டன் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்ற தமிழக பெண் வீராங்கனைகள் துளசி மதி முருகேசன், மனிஷா மற்றும் நித்யஸ்ரீ அவர்களுடன் பாரிஸ் ஈபிள் டவர் முன்பாக மகிழ்ச்சியுடன் நினைவு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் வானதி சீனிவாசன் ஈபிள் டவர் முன்பு வீராங்கனைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...