கோவை மாநகராட்சி ஆணையர் மண்டல அளவிலான கபடி போட்டிக்கு தேர்வான மாணவிகளை வாழ்த்தினார்

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன், மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை வாழ்த்தினார். மாணவிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற ஊக்கமளித்தார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (05.09.2024), மண்டல அளவிலான கபடி மற்றும் தடகள போட்டிகளுக்கு தேர்வான மூன்று மாணவிகளை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் வாழ்த்தினார்.

மத்திய மண்டலம் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி எஸ். இதழ்யஸ்ரீ, இளையோர் தடகளப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அதேபோல், 10-ம் வகுப்பு மாணவிகளான எஸ். மோனிஷா மற்றும் ஐ.ஜாய்ஸ்மின் ஆகியோர் கபடிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இம்மூன்று மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் பாராட்டினார். மேலும், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுமென மாணவியர்களுக்கு ஆணையாளர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் வித்யா இராமநாதன் மற்றும் மாநகர கல்வி அலுவலர் குணசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...