விநாயகர் சதுர்த்தி: டாஸ்மாக் கடைகளுக்கு இரு நாள் விடுமுறை வேண்டும் - இந்து முன்னணி கோரிக்கை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 16.5 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என தெரிவித்தார்.



திருப்பூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வரா சுப்பிரமணியம், "தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தன்னெழுச்சியாக வீடுகள் மற்றும் தங்கள் பகுதிகளில் 15 லட்சம் சிலைகள் வைத்து கொண்டாட உள்ளனர்" என்றார்.

திருப்பூரில் நான்காவது நாளும், கோவையில் ஐந்தாம் நாளும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட உள்ளதாக தெரிவித்தார். "விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் கொடுத்துள்ளோம். மற்ற மத பண்டிகைகள் போல இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதோடு கொண்டாடவும் அழைப்பு விடுத்துள்ளோம்" என்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 1500 இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாடப்பட உள்ளதாகவும், திருப்பூரில் நடைபெறும் விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கிறார் எனவும் தெரிவித்தார்.

மேலும், "விநாயகர் சிலைகள் வைக்க சில பகுதிகளில் போலீசார் மூலம் நெருக்கடி தரப்படுவதாகவும், இதனை தவிர்க்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார். "உளவுத்துறை மூலம் திருப்பூரில் வாழும் வங்கதேசத்தினரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார். நிகழ்வில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...