மது குடித்துவிட்டு வேலை செய்த கட்டிட தொழிலாளி மரணம்

திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதியை சேர்ந்தவர் பிளிஸ்ராஜ். இவர் நல்லே கவுண்டன் பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். 

மது அருந்தும் பழக்கம் கொண்ட பிளிஸ்ராஜ்(31) கடந்த 24-ம் தேதி மது குடித்துவிட்டு பணிக்கு சென்றுள்ளார். மது போதையில் கட்டியத்தின் மேற்கூரையில் வேலை செய்து கொண்டிருந்த பிளிஸ்ராஜ் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். 

இதில், பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதைதொடர்ந்து பிளிஸ்ராஜின் குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து கோவைக்கு வந்த பிளிஸ்ராஜின் சகோதரர் ஜேசுராஜ் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிளிஸ்ராஜ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...