கல்லூரி அருகே உள்ள பேக்கரியில் போதை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

பள்ளி மற்றும் கல்லூரி அமைந்துள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையில் கல்லூரியின் அருகே போதை பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை வஞ்சிமா நகர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கல்லூரியின் அருகே புகையிலை, பாக்கு மற்றும் சிகரட்டுகள் விற்பனை நடைபெறுவதாக பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இந்த தகவலை அடுத்து நேற்று மாலை வஞ்சிமாநகர் பகுதிக்கு சென்ற போலீசார், அங்கு இருந்த பேக்கரி ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்களான பான்மசாலா, குட்கா மற்றும் சிகரட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து, பேக்கரி நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த போதை பொருட்களை போலீசார் பரிமுதல் செய்தனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...