பரம்பிக்குளம் அணை நிரம்பியது: மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியதால், மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு 3,600 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து தொடர்கிறது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணை நேற்று (செப்டம்பர் 5) முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து, மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமான இந்த அணை 72 அடி உயரமும், 17 டி.எம்.சி. மொத்த நீர்க் கொள்ளளவும் கொண்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 71.78 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 4,600 கனஅடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வினாடிக்கு 3,600 கனஅடி நீர் மூன்று மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டது.

வெளியேற்றப்படும் உபரி நீர் பொரிங்கல் குத்து அணை மற்றும் சாலக்குடி அருவி வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. மேலும், 1,000 கனஅடி நீர் சுரங்கப்பாதை வழியாக காண்டூர் கால்வாய்க்கு செல்கிறது.

அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், பி.ஏ.பி. திட்ட கண்காணிப்பு பொறியாளர் கார்த்திக்கேயன், பரம்பிக்குளம் அணை செயற்பொறியாளர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார், உதவி பொறியாளர்கள் தியாகராஜன் மற்றும் சங்கீதா ஆகியோர் அணையின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்ட மதகுகள் வழியாக சோதனை ஓட்டமாக நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தொடர்ந்து உபரி நீர் வெளியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...