நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துபோராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையை கண்டிப்பதாக, கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஜிஎம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், காண்ட்ராக்ட் மற்றும் பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதை நிறுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறைக்கு பதிலாக நிரந்தர பணியை உறுதி செய்ய வேண்டும், எட்டு மணி நேர வேலை சட்டப்பூர்வமாக அமல்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர் நலனுக்கு எதிரான புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. குடியரசு தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ். மகேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பாபு ஏ. ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி வி. வெங்கட்ராமன் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஒய். அப்துல் முத்தலிப் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...