கோவையில் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

கோவையில் வரும் 11, 12 தேதிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் கூட்டமைப்பு ஆலோசனை, மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா மற்றும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.


கோவை: கோவையில் வரும் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்.

11ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக அரங்கில் பல்வேறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்துகிறார்.

12ஆம் தேதி காலை 10:00 மணியளவில் ஹிந்துஸ்தான் கல்லூரி அரங்கில் மத்திய மகளிர் நலத்திட்டங்கள் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்கும் மத்திய நிதி அமைச்சர், 1,500 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்குகிறார்.

அதே நாள் மாலையில் பா.ஜ.க கட்சி சார்பில் புதிய உறுப்பினர்கள் இணையும் நிகழ்வு மற்றும் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் 25,000 புதிய உறுப்பினர்கள் கட்சியில் இணைய உள்ளனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...