விநாயகர் சதுர்த்தி: கோவை பூ மார்க்கெட்டில் குவிந்த மக்கள் - பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்வு

கோவையில் விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக பூ மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர். பூக்களின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மல்லி, செவ்வந்தி, ரோஜா பூக்களின் விலை அதிகரித்துள்ளது.



கோவை: விநாயகர் சதுர்த்தி விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் அலங்காரத்திற்கான பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கோவை பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் 500 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி, 800 ரூபாய் முதல் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.

செவ்வந்தி பூ கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் 200 முதல் 300 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ரோஜா பூக்களின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்திருக்கின்றன.



விநாயகர் அலங்காரத்துக்கு தேவைப்படும் தென்னை குருத்து தோரணம், மா இலை தோரணம், எருக்கம் பூ மாலை உள்ளிட்ட பூஜை மலர் மற்றும் தோரணங்களின் விலையும் உயர்ந்திருக்கின்றன.



சந்தைகளில் பூக்களின் விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்பதனால், பொதுமக்கள் பூக்களை வாங்குவதற்கு ஆர்வமுடன் குவிந்திருக்கின்றனர்.



விலை உயர்ந்த போதிலும், விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்பதனால், பூ வாங்க வேண்டும் என தெரிவித்த பெண்கள், ரோஜா, செவ்வந்தி மல்லி போன்ற பூக்களை வாங்கி செல்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....