தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 10, 2024 அன்று ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறுகிறது. பயிற்சிக் கட்டணம் ரூ.900.


கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறை "ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சியை செப்டம்பர் 10, 2024 அன்று நடத்துகிறது.

இந்தப் பயிற்சியில் ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள் / இரை விழுங்கிகள், நெல் அந்துப்பூச்சி வளர்ப்பு முறை, டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு, புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு, பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ் வளர்ப்பு மற்றும் பயிர் பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் பயன்பாடு ஆகியவை பற்றி விரிவாக விளக்கப்படும்.

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் அன்றைய தினம் காலை 9.00 மணிக்குள் பூச்சியியல் துறைக்கு வந்து சேர வேண்டும். பயிற்சிக் கட்டணமாக ரூ.900 நேரடியாக பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும். பயிற்சி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். பயிற்சியின் முடிவில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், வேளாண் பூச்சியியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 641 003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்கள்: 0422-6611214, 6611414. மின்னஞ்சல்: [email protected].

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...