கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா நடைபெற்றது. தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.


Coimbatore: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்கள் செப்டம்பர் 5 மற்றும் 6ஆம் தேதிகளில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஏ.சௌந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை தாங்கினார். எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கல்வித்துறை இயக்குநர் என்.ஆர்.அலமேலு சிறப்புரை ஆற்றினார்.

முதல் நாள் விழாவில், கோவை அல்ஸ்டாம் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு தலைவர் சாயா பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தனது உரையில், தொழில்நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும், இந்த தொழில்நுட்ப உலகில் மிகவும் முக்கியமான அடிப்படைகளை வலுப்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார். மேலும், வளாகத்தில் கிடைக்கும் ஏராளமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார்.

இரண்டாம் நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரத்தின் எம்பெடெட் - குரு எல்.எல்.சி. நிறுவனத்தின் இயக்குனர் ஹரீஷ் ஜானகிராமன் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், மாணவர்கள் எப்போதும் நேர்காணலுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மகாபாரதத்தில் இருந்து அனுமானங்களை மேற்கோள் காட்டி, உடல், ஆன்மா மற்றும் மனதில் செயலில் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இறுதியாக, தற்போதைய போக்குகளைத் தெரிந்துகொள்ளும் வகையில் படிக்கும் பழக்கத்தை வளர்க்க மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

கௌரவ விருந்தினர்களாக, இக்கல்லூரியில் 1996-2000 கல்வி ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள், கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு குழு இயக்குனர் சக்திவேல் ராஜசேகர், பெங்களூரு இன்ஜினியரிங் ஆர்ம் எம்பெடட் டெக்னாலஜிஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் இயக்குநர் பழனியப்பன் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருட பட்டப்படிப்பை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் எனவும், பல்வேறு நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், தற்போது பயின்று கொண்டிருக்கும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாணவ மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழும் பரிசும் வழங்கினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...