கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்துகளை இயக்கிய தனியார் பேருந்து ஓட்டுனர்கள் கைது

கோவை- பொள்ளாச்சி  நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காக 414 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலையாக விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.



இதற்காக சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு சாலையை அகலப்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் சாலையின் இரு புறமும் கற்களை கொட்டி காங்கிரீட் அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் குறுகிய சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளுடன் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சாலையில் செல்வதால் அப்பேருந்தில் பயணம் செய்பவர்கள் மட்டுமின்றி அந்த சாலையில் செல்லும் இதர வாகன ஓட்டிகளும் தங்களது உயிரை பணயம் வைக்க வேண்டியுள்ளது.



இதனிடையே, கோவை- பொள்ளாச்சி சாலையில் அதிவேகமாக பேருந்து ஓட்டிய தனியாா் பேருந்து ஓட்டுனர்கள் வைரமுத்து (42), நாகராஜ் (41) ஆகியோா் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் இன்று அவர்களை கைது செய்யதனர். மேலும், அந்த சாலையில் அதிவேகமாக சென்ற பத்துக்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளை கிணத்துக்கடவு காவல் துறையினர் சிறை பிடித்தனர். தொடர்ந்து, அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் விசாரணை மேர்ட்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து பயணிகள் கூறுகையில், கோவை முதல் பொள்ளாச்சி வரையிலான பேருந்து போக்குவரத்து மிகவும் ஆபத்தான சாகசமாக உள்ளது. தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தங்களுக்குள் போட்டிபோட்டுக்கொண்டு பயணிகளின் உயிரில் விளையாடி வருகின்றனர். இதனால் கோவை- பொள்ளாச்சி சாலையில் விபத்து அன்றாடக்காட்சியாகி விட்டது. காவல்துறையினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து, அதிவேகமாக செல்லும் பேருந்து ஓட்டுனர்களின் உரிமத்தை ரத்து செய்வதோடு மட்டுமின்றி பேருந்துகளையும் ஜப்தி செய்ய வேண்டும்" என்றனர்.



இதனிடையே விலை உயர்ந்த இரண்டு கார்களில் பொள்ளாச்சி சாலை வழியாக அதிவேகமாக ஓட்டும் போட்டியில் இருவர் ஈடுபட்டுள்ளனர். இதனைதொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் உத்தரவின் பேரில் அந்த கார் ஓட்டுனர்களை பிடித்த காவல்துறையினர் அவர்களின் வாகன ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...