நீர்த்தேக்கமாக காட்சியளிக்கும் உதகை பேருந்து நிலையம்- பொதுமக்கள் அவதி

தமிழத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்று மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரான நீலகிரி, உதகை. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் உதகையின் எழில்கொஞ்சும் இயற்கை அழகைக்காக ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். 

மேலும், தற்போது தமிழகத்தின் சமவெளிப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதாலும், கோடை விடுமுறை மற்றும் தற்போது மே தினத்தை முன்னிட்டு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களுக்கு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறைகள் விடப்பட்டுள்ளதாலும் பல்லாயிறக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு உட்பட்ட உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.



இந்நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட நிலகிரியின் உதகை பேருந்து நிலையத்தின் சாலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இந்த பேருந்து நிலையத்தின் சாலை கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் நிரம்பி ஏதோ குளம், குட்டை போல் காட்சியளித்து வருகிறது. இதனால், பேருந்து பயணிகள் நடப்பதற்கு பாதையின்றி பேருந்தில் ஏற சிறமப்பட்டு வருகின்றனர்.



மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையினை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...