கோவை தண்ணீர்பந்தல் அருகே பஞ்சு குடோனில் தீ விபத்து

கோவை மாவட்டம், ஹோப்காலேஜ் அருகே அமைந்துள்ள தண்ணீர்பந்தல் குடியிருப்புகளும், தொழில் நிறுவனங்களும் நிறைந்த பகுதியாகும். இந்நிலையில், இன்று மே தினத்தினை  முன்னிட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் செயல்பட்டு வந்த பஞ்சு குடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



இதில், அந்த குடோனில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின. விடுமுறை நாள் என்பதால் எவ்வித உயிர்சேதங்களும் ஏற்படவில்லை. 

இதுகுறித்து தகவலறிந்த தீயனைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...