கோவை செட்டி வீதி அருகே இளைஞர் துரத்தி வெட்டிக் கொலை

கோவை செட்டி வீதி அருகே, மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கெம்பட்டி காலனியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் கோகுல் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பாலாஜி அவென்யூ பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் அரிவாள் மற்றும் கட்டை பயன்படுத்தப்பட்டது.


கோவை: கோவை செட்டி வீதி அருகே இளைஞர் ஒருவர் துரத்தப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கெம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல் (24) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். மது போதையில் ஏற்பட்ட வாக்குவாதமே இந்த கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

பாலாஜி அவென்யூ பகுதியில் கோகுலை எதிர்தரப்பு இளைஞர்கள் துரத்தியதாகவும், பின்னர் அரிவாளால் வெட்டியும் கட்டையால் தாக்கியும் கொலை செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையாக காயமடைந்த நிலையில், ரத்தம் வடிந்தபடி ஓடி ஒளிந்த கோகுல் உயிரிழந்துள்ளார். சாலையில் தெரிந்த ரத்தத்தைப் பின்தொடர்ந்து சென்ற பொதுமக்கள், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கோகுலின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையில் ஈடுபட்டவர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...