உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழா: பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கணபதி ஹோமம், அபிஷேகம், பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை ஐஸ்வர்யா நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் அரிமா லோகநாதன் தலைமை வகித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக, கணபதி ஹோமம், அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, திருமறை திருப்புகழ் நாமவளி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சிக்கு உடுமலை மக்கள் பேரவை தலைவர் யு.கே.பி முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார்.



டாக்டர் சம்பத்குமார் மற்றும் நகர மன்ற உறுப்பினர் தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில், பாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கற்பக விநாயகர் அறக்கட்டளை சார்பில் மேற்கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...

கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை...

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...