உலக பிசியோதெரபி தினம்: மேட்டுப்பாளையம் முதியோர் இல்லத்தில் இலவச மருத்துவ முகாம்

உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு, ரிலீப் பிசியோ கிளினிக் மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் இலவச பிசியோதெரபி முகாமை நடத்தியது. 70 முதியோர்கள் பயனடைந்தனர்.


கோவை: உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு இன்று மேட்டுப்பாளையத்தில் உள்ள விஸ்வநாத செட்டியார் முதியோர் இல்லத்தில் ரிலீப் பிசியோ கிளினிக் சார்பில் இலவச பிசியோதெரபி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று சிறப்பாக நடத்தினர். இந்த முகாமில் 70 முதியோர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



முகாமில் பங்கேற்ற முதியோர்களுக்கு கை, கால் வலி, மூட்டு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வலியில்லா நிவாரணம் மற்றும் எளிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த முதியோர்கள், ரிலீப் பிசியோ கிளினிக் மருத்துவர் கோகிலாஸ்ரீ, மருத்துவர் பெர்னாண்டஸ் பிராங்க்ளின் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாம் ஆதரவற்ற முதியோர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. இது போன்ற முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று முதியோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...