கோவை குற்றப்பிரிவு டி.எஸ்.பி. மீது கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு: வியாபாரி பரபரப்பு புகார்

கோவையில், தேங்காய் வியாபாரி பிரகாஷ், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. தன்மீது போலி வழக்குகள் பதிந்து கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



கோவை: கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி பிரகாஷ் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.



தன்மீது போலியான வழக்குகள் பதியப்பட்டிருப்பதாகவும் கோவை மாவட்ட குற்றபிரிவு டி.எஸ்.பி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார்.



பிரகாஷ் கூறியதாவது: "குமரவேல் மற்றும் ரவிகுமார் என்பவர்களுடன் நீண்டகாலமாக கொப்பரை மற்றும் தேங்காய் வியாபாரம் செய்து வந்தேன். குமரவேல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கூறி என்னிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டார். குமரவேல் மற்றும் ரவிகுமார் குறித்து விசாரித்ததில் இருவரும் பலரிடம் பணம் பெற்றிருப்பது தெரியவந்தது."

"இந்நிலையில் குமரவேல் மற்றும் ரவிகுமார் ஆகியோர் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் சில அதிகாரிகளின் துணையுடன் என் மீது போலி புகார்கள் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.யிடம் நேரில் ஆஜராகி அனைத்து ஆவணங்களையும் சமர்பித்தேன். ஆனால் டி.எஸ்.பி. அதனை ஏற்காமல் காலதாமதம் செய்வதோடு பணத்தை செட்டில்மெண்ட் செய்யச்சொல்லி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகிறார்," என்று பிரகாஷ் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காவல்துறை தலைவரை சந்தித்து புகார் அளித்துள்ளதாகவும், தற்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவரையும் நேரில் சந்தித்து புகாரளிக்க வந்ததாகவும் பிரகாஷ் தெரிவித்தார்.

"வியாபாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை கட்டுப்படுத்தவில்லை என்றால் எங்களைப் போன்ற வியாபாரிகள் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை," என்று பிரகாஷ் வேதனையுடன் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...