வால்பாறையில் கன மழை - மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு


வால்பாறை சுட்டுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வால்பாறையை அடுத்துள்ள முடீஸ் சுட்டுவட்டாரப் பகுதியில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

இதில், முடீசில் உள்ள ஆறு மற்றும் முடீஸ் அருகே உள்ள தெப்பக்குளத்தில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. மேலும், பலத்த சூறாவளிக்காற்று வீசியதில் முடீஸ் பஜார் பகுதியில் செயல்பட்டு வரும் காவல் நிலையம் அருகாமையில் சாலையோரம் இருந்த சுமார் 80 வருடம் பழமைவாய்ந்த மரம் வேருடன் அருகில் இருந்த மின் கம்பத்தின் மீது சாய்ந்தது. தொடர்ந்து, அந்த மரம் சாலையில் விழுந்த நிலையில், அதன் அருகில் இருந்த இரண்டு மின் கம்பங்களும் காவல் நிலையத்தின் மீது விழுந்தது. அதிர்ஸ்டவசமாக இதில் எவ்வித உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்படவில்லை.



இதனைத்தொடர்ந்து, சாலையின் குறுக்கே விழுந்த மரத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், எஸ்டேட் நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து அந்த மரத்தினை அகற்றினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...