பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவின் 20வது தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு.

தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் கட்டுமான தொழில் பாதிக்கபட்டுள்ளதாக பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா குற்றசாட்டு.

பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை அமைப்பு சார்பில் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. கட்டுமான துறை கடந்த 9 மாதங்களுக்கு மேலாக மோசமான நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.இதற்கு தமிழக அரசு நிலையான முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர். கட்டுமான துறையில் சில சிக்கல் ஏற்பட்டால் பல்வேறு அரசு துறைகளை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளதால் கால தாமதம் மற்றும் நேரம் விரயமாவதாகவும் கூறியவர்கள் கட்டுமான துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை. வைக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.



மேலும் ஒற்றை சாளர முறையை கட்டுமானங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க வலியுறுத்தினர்.சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் ஆற்று மணலை தவிர்த்து கட்டுமான தொழிலில் செயற்கை மணலை அதிகம் உபயோகிக்கபட வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் ஆற்று மணல் விலையை ஒப்பிடும்போது செயற்கை மணலின் விலை குறைவு என தெரிவித்தவர்கள் மணலின் தரத்தை அரசு உறுதி செய்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தற்போது மஹாராஷ்ட்ரா,கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஆற்று மணல் தவிர்த்து செயற்கை மணல் மூலமே கட்டுமான தொழில் நடைபெறுவதால் இயற்கை வளம் பாதுகாக்கபடுவதாக தெரிவித்தனர்.

மேலும் கட்டுமான துறையில் திறன்மிகு தொழிலாளர் பற்றாகுறை நிலவுவதாக தெரிவித்தவர்கள் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாக கூறினர். இன்று மாலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா கோவை பிரிவு 20வது தலைவராக ராஜவேல் அவர்களும் துனை தலைவராக சின்னசாமி,செயலாளராக சிவராஜன்,துனை செயலாளராக பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு தேசிய தலைவர் விஜய ராகவ ரெட்டி பதிவி பிரமானம் செய்து வைக்க உள்ளார்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...