மேட்டுப்பாளையம் அருகே கார் விபத்து: தீயில் சிக்கி ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு

மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் அதிவேக கார் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் தீப்பிடித்த காரில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்தார். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த கார் ஒன்று தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் உள்ள குளிர்பதன கிடங்கு அருகே உள்ள பாலத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

விபத்துக்குள்ளான கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரின் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட நிலையில், தீ பிடித்து எரிந்த காரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். இதனால் உடல் கருகி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



தகவல் அறிந்ததும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரில் பிடித்த தீ அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. தீயணைப்பு வீரர்கள் தீவிர முயற்சி எடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர் சிறுமுகை அருகே உள்ள கோவிந்தனூரை சேர்ந்த நவீன்குமார் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...