மேட்டுப்பாளையத்தில் வீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார் மத்திய இணை அமைச்சர் எல். முருகன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வீடு வீடாகச் சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமை நடத்தினார். அவர் மத்திய அரசின் சாதனைகளையும், பிரதமர் மோடியின் நிர்வாகத்தையும் எடுத்துரைத்தார்.


Coimbatore: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் முகாம் அலுவலகம் அமைந்துள்ள பொன்விழா நகர் பகுதியில் இன்று பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.

பொன்விழா நகரில் உள்ள வீடுகளுக்கு கட்சி நிர்வாகிகளுடன் நேரடியாக சென்ற மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காலை 10 மணிக்கு மத்திய அரசின் சாதனைகளை கூறியும் பிரதமர் மோடியின் திறமையான அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறி உறுப்பினர் சேர்க்கை செய்தார்.



பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கையை செய்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணை தலைவர் விக்னேஷ் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...