உடுமலையில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல், இடமாற்றம் செய்தல் போன்ற முக்கிய விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.



Coimbatore: உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு மற்றும் பகுப்பாய்வு குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளர் ஜலஜா தலைமை வகித்தார். உடுமலை சட்டமன்றத் தொகுதியில் கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை மாற்றுவதற்கும், சூளேஸ்வரன்பட்டியில் உள்ள வாக்குச்சாவடிகளை பிரிப்பதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.



மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் ருத்ராபாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை இரண்டாகப் பிரிப்பதற்கும், குப்பம்பாளையம் பகுதியில் புதிய வாக்குச்சாவடி அமைப்பதற்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடுமலை சட்டமன்ற தொகுதியில் 294 வாக்குச்சாவடிகளில் 2,64,414 வாக்காளர்களும், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் 287 வாக்குச்சாவடிகளில் 2,36,059 வாக்காளர்களும் உள்ளனர்.

இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தாசில்தார் பானுமதி, தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி, உடுமலை நகர பாஜக தலைவர் கண்ணாயிரம், திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன், உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் கோ. ரவி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதி கிருபாகரன், திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...