மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மேயர் தலைமையில் 65 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. 65 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.



கோவை: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் 65 கோரிக்கை மனுக்களை அளித்தனர். இம்மனுக்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, காலியிடவரி, புதிய குடிநீர் இணைப்பு, பெயர் மாற்றம், மருத்துவம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தன.

மண்டல வாரியாக பெறப்பட்ட மனுக்களின் விவரம்:

கிழக்கு மண்டலம் - 8 மனுக்கள்

மேற்கு மண்டலம் - 9 மனுக்கள்

வடக்கு மண்டலம் - 10 மனுக்கள்

தெற்கு மண்டலம் - 8 மனுக்கள்

மத்திய மண்டலம் - 19 மனுக்கள்

பிரதான அலுவலகம் - 11 மனுக்கள்

மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன், பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



கூட்டத்தின் போது, தெற்கு மண்டலம் வார்டு எண் 93-க்குட்பட்ட இடையர்பாளையம், குனியமுத்தூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த உன்னி என்பவரின் மகளின் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்யப்பட்டதற்கான ஆணையை மேயர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் நகரமைப்பு அலுவலர் குமார், தலைமைப்பொறியாளர் செந்தில்குமரன், முருகேசன், உதவி மாநகர துணை ஆணையர்கள் முத்துசாமி, சந்தியா, மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், பொறியாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...