இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 6ம் தேதி தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு


மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை சிவானந்த காலனி பகுதியில் வருகின்ற மே 6 ஆம் தேதியன்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியர் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய பாஜக அரசு பல்வேறு வகையில் இந்தியை திணித்து வருகிறது. மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்த்து முதற்கட்டமாக வருகின்ற மே 6 ஆம் தேதியன்று கோவை மாவட்டம், சிவானந்த காலனி பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்படும்.

கேரள மாநிலத்தில் பத்தாம் வகுப்பு வரை மலையாளம் கட்டாய பாடமாக்கப்பட்டது போல, தமிழகத்திலும் தமிழ் பத்தாம் வகுப்பு வரை கட்டாய பாடமாக்கப்பட வேண்டும். மேலும், இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தை கோவை மாவட்டத்தில் இருந்து துவங்க உள்ளோம். இதனை தொடர் போராட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...