பொள்ளாச்சி அருகே இரு துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் நாளை மின் தடை

பொள்ளாச்சி அருகே கோவில்பாளையம் மற்றும் தேவனாம்பாளையம் துணை மின் நிலையங்களில் நாளை (செப்.11) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள இரண்டு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல பகுதிகளில் நாளை (செப்டம்பர் 11) மின் வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, மில் கோவில்பாளையம், முள்ளுபாடி, செங்குட்டைபாளையம், என்.ஜி புதூர், வடக்கிபாளையம், பெரும்பதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

அதேபோல், தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம், குளத்துப்பாளையம், சேரி பாளையம், ஆண்டிப்பாளையம், வகுதம்பாளையம், செடிபுதூர் ஒரு பகுதி, கப்பளாங்கரை ஒரு பகுதி, செரிபாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் வினியோகம் இருக்காது.

இந்த மின் தடை நாளை (செப்டம்பர் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நீடிக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மின்நுகர்வோர் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...