கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு குடும்பங்களுக்கு தலா 90 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. மொத்த தீர்வு தொகை ரூ.1.11 கோடி. பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் மீண்டும் இணைந்தனர்.


Coimbatore: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (Lok Adalat) ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த தீர்வு தொகை ரூ.1 கோடியே 11 லட்சத்து 42 ஆயிரம் ஆகும்.

கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயா தலைமையில் கோவை நீதிமன்றங்கள், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த விசாரணையில் விபத்தில் உயிரிழந்த இரு குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2024ஆம் ஆண்டு போத்தனூர் செட்டிபாளையம் சாலை பகுதியில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மித்ரகாந்த் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 90 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது.

அதேபோல், 2025ஆம் ஆண்டு ஆனைக்கட்டியிலிருந்து கோயமுத்தூர் மெயின் ரோட்டில் ஏற்பட்ட நான்கு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்த மணிராஜ் குடும்பத்தினருக்கு இழப்பீடாக 90 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இம்மக்கள் நீதிமன்றத்தில் சமரசம் செய்யக்கூடிய சிறுகுற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், நிலம் சொத்து பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன்கள், கல்விக்கடன்கள் தொடர்பான வழக்குகள், விவாகரத்து தவிர மற்ற குடும்ப பிரச்சனை வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வழக்குகள் (Pre-Litigation) ஆகியவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இம்மக்கள் நீதிமன்றம் மூலம் 5 ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த 58 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பிரிந்து வாழ்ந்த 6 தம்பதிகள் திரும்பவும் இணைந்து வாழ தீர்வு காணப்பட்டது.

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி நடைபெற்ற இந்த மக்கள் நீதிமன்றம், சட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்தி, விரைவான நீதி வழங்குவதில் முக்கிய பங்காற்றியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...