மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீர் தீ விபத்து: ஓட்டுநர் உயிர் தப்பினார்

மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரியில் திடீரென தீ பற்றி எரிந்தது. ஓட்டுநர் சுயாதீனமாக தப்பித்தார். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.



கோவை: மேட்டுப்பாளையம் உதகை சாலையில் சிமெண்ட் லாரி ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் சிமெண்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, அரியலூர் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லாரி ஒன்று, உதகை சாலையில் சின்ன பள்ளி வாசல் அருகே வந்தபோது திடீரென முன்பக்கத்தில் தீ பற்றி எரியத் தொடங்கியது.



இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முனியசாமி, உடனடியாக லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு அங்கிருந்து இறங்கி தப்பினார். பின்னர் லாரியின் முன்பகுதி வேகமாக எரியத் தொடங்கியது.

சம்பவத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியவில்லை. உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேட்டுப்பாளையம் உதகை சாலையில் இந்த சம்பவம் நடந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். லாரியில் திடீரென எப்படி தீ பற்றியது என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...