கோவையில் சிறப்பாக நடைபெற்ற ஆசிரியர் தின விழா: 11 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

கோயம்புத்தூர் மாநகராட்சியின் ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 11 ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் கணபதி.ப.ராஜ்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி கல்வித்துறையில் பல்வேறு திட்டங்கள் சிறப்புடன் செயல்படுத்தப்படுவதாகவும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக அமைந்ததாகவும் பாராட்டினார்.

மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் பேசுகையில், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் வருகை மற்றும் தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருவது பெருமைக்குரியது என்றார். மேலும், ஆசிரியர்களை கௌரவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, மாநில அளவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 ஆசிரியர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினரும் மாநகராட்சி ஆணையாளரும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் K. சிவகுமார், மண்டலத் தலைவர்கள் K.A. தெய்வயானை தமிழ்மறை, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனாலோகு, மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, மண்டல உதவி ஆணையர்கள் சந்தியா, செந்தில்குமரன், ஸ்ரீதேவி, மாநகர கல்வி அலுவலர் R. குணசேகரன், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...