கோவை வழியாக ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

கர்நாடகாவின் ஹூப்ளியில் இருந்து கேரளாவின் கொச்சுவேலி வரை கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை செப்டம்பர் 13 முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


Coimbatore: கர்நாடக மாநிலம் ஹூப்ளி மற்றும் கேரள மாநிலம் கொச்சுவேலி இடையே கோவை வழியாக சிறப்பு ரயில் சேவை இயக்கப்படவுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சிறப்பு ரயில் சேவை குறித்த விவரங்களை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஹூப்ளி - கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 07333) செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6:45 மணிக்கு கொச்சுவேலி நிலையத்தை சென்றடையும்.

திரும்பும் பயணத்தில், கொச்சுவேலி - ஹூப்ளி சிறப்பு ரயில் (எண்: 07334) செப்டம்பர் 14 ஆம் தேதி நண்பகல் 12:50 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12:50 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில் பின்வரும் முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்: கொல்லம், காயன்குளம், செங்கன்னூர், திருவல்லா, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு மற்றும் பிரூர்.

இந்த சிறப்பு ரயில் சேவை மூலம் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் பயணிகளுக்கு பெரும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...