ஓணம் பண்டிகைக்காக கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில் சேவை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் செப்டம்பர் 13 முதல் 16 வரை இயக்கப்படும்.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை வழியாக சென்னை-மங்களூரு மற்றும் சென்னை-கண்ணூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை-மங்களூரு சிறப்பு ரயில் (எண்: 06161) செப்டம்பர் 13 அன்று மாலை 3:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 8:30 மணிக்கு மங்களூரு ரயில் நிலையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் (எண்: 06162) செப்டம்பர் 15 அன்று மாலை 6:45 மணிக்கு மங்களூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11:40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் காசர்கோடு, நிலேஸ்வர், பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை-கண்ணூர் சிறப்பு ரயில் (எண்: 06163) செப்டம்பர் 14 அன்று இரவு 11:50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 1:30 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையத்தை வந்தடையும். திரும்பும் வழியில், கண்ணூர்-சென்னை சிறப்பு ரயில் (எண்: 06164) செப்டம்பர் 16 அன்று மாலை 3:45 மணிக்கு கண்ணூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7:55 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில் தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், ஒட்டப்பாலம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...