மேட்டுப்பாளையம்- கோவை வழி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை (ஏர் ஹாரன்) பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், ஒலி மாசு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்த தடை விதித்தது. 



இருப்பினும், பல்வேறு பகுதிகளில் இன்னும் சில தனியார் பேருந்துகள், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களில் இவ்வகையான ஏர் ஹாரன்களை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை தடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.



அதன்படி, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் மற்றும் ஆடியோ கருவிகளை மேட்டுப்பாளையம் ஆர்டிஓ தியாகராஜன் செவ்வாயன்று திடீர் சோதனை மேற்கொண்டு பறிமுதல் செய்தார்.

தொடர்ந்து சோதனை நடத்தி போக்குவரத்து விதிகளை மீறி அதிக வேகமாக செல்லும் பேருந்துகள் மீதும், ஓட்டுநர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ தியாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...