பத்திரிகை சுதந்திர தினம் இன்று...

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றழைக்கப்படும் பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் 3-ம் நாள் சர்வதேச பத்திரிகை சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூகத்தில் நடக்கும் அவலங்களையும், அரசின் குறைகளையும் மற்றும் மக்களின் தேவைகளையும் எழுத்தின் மூலமாக சுட்டிக்காட்டி அதற்கான தீர்வை பெறுகின்ற உன்னத பணியை மேற்கொள்ளும் ஒருவரே உண்மையான பத்திரிகையாளராகிறார்.

அவ்வாறு பத்திரிகையாளர் ஒருவர் நிதர்சனங்களை எழுதும் பொழுது அவருக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் எழுவது வாடிக்கையாகி வருகிறது.

கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ம் நாள் கொலம்பிய பத்திரிகையாளர் கிலேர்மோ கானோ இசாசா என்ற பத்திரிகையாளர் ஒருவர், அவரது அலுவலத்தின் முன்பு சமூக விரோதிகள் சிலரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரின் மரணத்திற்கு பிறகே பத்திரிகை சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் வலுப்பெற்றது.

பத்திர்கை சுதந்திரத்திற்காக போராடும் ஒவ்வொருவருக்கும் இந்நாளில் யுனெஸ்கோ சார்பில் கிலேர்மோ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. சுமார் 14 நபர்கள் கொண்ட குழு ஒன்றால் சிறந்த பத்திரகை சுதந்திர போராளி ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு 25 டாலர் மதிப்புடைய பரிசு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மகராஷ்டிரா முன்னோடியாக திகழ்கிறது. அங்கு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று சமீபத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களை பாதுக்காக்கும் விதமான இச்சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அனைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...